இந்தியா, ரஷ்யா, சீனா மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார் ட்ரம்ப் !

இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா முதலான நாடுகள் உலக காலநிலை தொடர்பில் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா முதலான நாடுகளில், சுத்தமான காற்று மற்றும் சுத்தமான தண்ணீர் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த 3 நாடுகளும், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் தூய்மை தொடர்பில் சிறந்த உணர்வைக் கொண்டிக்கவில்லை என்றும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ரய்ஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஸ்காட்லாந்தில் உள்ள கலைப்பள்ளியில் தீ விபத்து!
ரஷ்யாவில் அடுக்குமாடி இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
|
|