அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த குளிரூட்டியில் 9 சடலங்கள்!
Wednesday, November 1st, 2017
ஜப்பானின் ஸாமா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2 மனிதத் தலைகள் உள்ளிட்ட 9 சடலங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், வீட்டின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
தலைநகர் டோக்கியோவின் தெற்கு பகுதியான ஸாமாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் நேற்று (30) ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பெட்டிக்குள் 2 மனிதத் தலைகள் இருந்துள்ளன.
இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிஸார், வீட்டின் கதவை உடைத்து சோதனையிட்ட போது அங்கு 7 சடலங்கள் இருந்துள்ளன. சடலங்களைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பியுள்ள பொலிஸார் அந்த வீட்டில் தங்கியிருந்த ஷிராய்ஷி (27) என்பவரை கைது செய்துள்ளனர்.
எனினும், வீட்டில் இருந்த சடலங்கள் தொடர்பில் தெளிவான காரணங்களை பொலிஸார் வௌியிடவில்லை.
Related posts:
இரட்டைக்கோபுர தாக்குதல்: சவுதி மீது வழக்கு தொடுக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஆதரவு!
ஐ. நா. அரசியல் விவகாரங்கள் தலைவர் வடகொரியா பயணம்!
சீன ரொகெட் பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்தது!
|
|