தொடர் தோல்வியில் ரோயல் செலஞ்ஜர்ஸ் பெங்களூர் அணி!

ஐ.பி.எல் தொடரில் நேற்று இடம்பெற்ற 14ஆவது போட்டியில் ரோயல் செலஞ்ஜர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்ஜர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்தாடிய, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில், 3 விக்கட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை கடந்தது.
அந்த அணி சார்பாக ஜோஸ் பட்லர் 59 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
இதற்கமைய, ரோயல் செலஞ்ஜர்ஸ் பெங்களூர் அணி பங்குபற்றியுள்ள நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இன்றைய தினம் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி மும்பையில் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
Related posts:
|
|