சாமுவேல்ஸ் பந்துவீச ஐசிசி அனுமதி!

மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் சாமுவேல்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்துவீச அனுமதியளித்துள்ளது ஐசிசி.
முன்னதாக அவர் விதிமுறைக்கு புறம்பாக பந்துவீசுவதாகக் கூறி தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி சாமுவேல்ஸ் பந்துவீசும் முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அவர் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து பந்துவீச அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சாமுவேல்ஸ், கடைசியாக நவம்பர் 2016-ல் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். பிறகு ஜிம்பாப்வே-வில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் அவர் நீக்கப்பட்டார். மார்ச்சில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. அதில் சாமுவேல்ஸ் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
தேசியமட்ட சைக்கிளோட்டத்தில் சாதித்த வடக்கு வீராங்கனைகள்!
இலங்கை, பங்களாதேஸ் அணிகளுக்கிடையேயான போட்டி இரத்து!
மிகப்பெரிய கிரிக்கெற் மைதானம் அவசியமா என்று மஹேல ஜெயவர்தனவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை பதிலளிப்பு!
|
|