கோபமடைந்த இந்திய வீராங்கனை!

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணித்தலைவர் மிதாலியிடம் உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார்? என்று ஊடகவியலாளர் ஒருவரது கேள்வியால் கோபம் அடைந்துள்ளார்.
மிதாலி ராஜிடம், இந்தியா–பாகிஸ்தான் அணிகளில் உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார் என்று நிருபர் கேள்வி எழுப்பியுள்ளார். ‘
அதற்கு அவர், ஆண் கிரிக்கெட் வீரர்களிடம் இதே கேள்வியை கேட்பீர்களா? அவர்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் வீராங்கனை யார் என்று கேட்பீர்களா? என்னிடம் எப்போதும் இப்படி தான், பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்கிறார்கள். ஆனால் அதற்கு பதிலாக பிடித்த பெண் கிரிக்கெட் வீராங்கனை யார்? என்று தான் கேட்க வேண்டும்’’ என்று சற்று கோபமாக பதில் அளித்தார்.
மிதாலிராஜ் மேலும் கூறுகையில், ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கும், எங்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பெண்கள் போட்டி டெலிவிஷனில் பெரும்பாலும் நேரடியாக ஒளிபரப்பு செய்வது கிடையாது. கடைசி இரண்டு உள்நாட்டு தொடர்களின் போது இந்திய கிரிக்கெட் வாரியம் நேரடி ஒளிபரப்பு செய்ய முயற்சித்தது.
சமுக வலைதளங்களின் மூலம் பெண்கள் கிரிக்கெட் நிறைய முன்னேற்றம் கண்டு இருக்கிறது. ஆனாலும் இன்னும் அங்கீகாரம் தேவை என்றே கருதுகிறேன். ஆண்களின் கிரிக்கெட் தான் இலக்கை நிர்ணயிக்கின்றன.
அந்த தரத்தை எட்டிப்பிடிக்கவே நாங்கள் எப்போதும் முயற்சிக்கிறோம். அது மட்டுமின்றி ஏதாவது ஒரு தருணத்தில் நாங்கள் எல்லோரும் ஆண் கிரிக்கெட் வீரர்களிடம் பயிற்சி பெற்றவர்கள் தான் என்று கூறியுள்ளார்.
Related posts:
|
|