ஓய்வு பெறுகிறாரா மாலிங்க?

இந்தியா அணியுடன் இடம்பெறவுள்ள எதிர்வரும் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணித்தலைவராக வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க செயற்படவுள்ளார்.
300 விக்கட்டுக்களை வீழ்த்த மாலிங்க இன்றும் ஒரு விக்கட்டை மாத்திரமே பெறவேண்டியுள்ளது. இந்த , இலக்கை கடந்த பிறகு லசித் மாலிங்க ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என கிரிக்கட் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும் , அவ்வாறான எந்த தீர்மானங்களையும் மாலிங்க மேற்கொள்ளவில்லை என மாலிங்கவின் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து எமக்கு தகவல் கிடைத்துள்ளது.அதேபோல் , தனக்கு முடிந்தளவு காலம் நாட்டுக்காக விளையாட தயாராக உள்ளதாக மலிங்க கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
அச்சுறுத்தும் பந்துவீச்சாளர்கள் இருப்பதுதான் இலங்கையின் பலம் - சொல்கிறார் டுபிளசி!
ROLL BALL உலகக்கிண்ணப் போட்டிக்கு மன்னாரிலிருந்து நான்கு வீரர்கள் பங்களாதேஷிற்கு பயணம்!
மாலிங்க-குலசேகர சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து கருத்து!
|
|