உலக அரங்கை திரும்பிப் பார்க்க வைத்த மலிங்க!

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி தம்புள்ளையில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 09 விக்கட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இங்கிலாந்து அணி சார்பாக மோகன் அதிகபட்சமாக 96 ஓட்டங்களைப் பெற்றதுடன், பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லசித் மாலிங்க 44 ஓட்டங்களுக்கு 05 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
இலங்கை அணியின் வெற்றி இலக்காக 279 என்ற ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலவச பூப்பந்தாட்ட பயிற்சி வழங்கல்!
இரண்டாவது சுற்றில் சிந்து!
இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு!
|
|