இலங்கை அணியுடன் பாகிஸ்தான் செல்லும் அமைச்சர் தயாசிறி!

இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் லாஹூரில் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடரில் தானும் கலந்து கொள்ளப் போவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த போட்டித் தொடரின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என சர்வதேச கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.தம்மால் காவற்துறை மா அதிபருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்நாட்டு பிரதி காவற்துறை மா அதிபர் ஒருவர் இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வலுவான நிலையில் இந்தியா - முரளி விஜய், புஜாரா சிறப்பான ஆட்டம்!
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு வோஜஸ் திடீர் அறிவிப்பு!
புரோ பட்மிண்டன் லீக் - ஆமதாபாத் வெற்றி!
|
|