ஆசிய கனிஷ்ட கரையோர கரப்பந்தாட்டப் போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்பு!

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் கில் இன்று ஆரம்பமாக உள்ள ஆசிய கனிஷ்ட கரையோர கரப்பந்தாட்டப் போட்டிகளில் இலங்கையின் சார்பில் ஆண் மற்றும் மகளிர் இரண்டு அணிகள் கலந்து கொள்கின்றன.
ஆசிய கனிஷ்ட கரையோர கரப்பந்தாட்டப் போட்டி 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியாக இது நடைபெறவுள்ளது.
நான்கு வீரர்களும், நான்கு வீராங்கனைகளையும் கொண்ட இலங்கைக் குழுவினருக்கு ஹெய்யந்துடுவ விளையாட்டு மைதானத்தில் விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டதாக இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எஸ்.நாலக தெரிவித்தார்.
Related posts:
ஓரங்கட்டப்பட்டார் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்க!
போலார்ட்டுக்கு அணியில் இடமில்லை!
100 ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் டேவிட் வோர்னர்!
|
|