அமொரிக்க நீச்சல் சாம்பியன் மைக்கல் பெல்ப்ஸ் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு!

அமொரிக்க நீச்சல் வீரரான மைக்கல் பெல்ப்ஸ் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
றியோ ஒலிம்பிக் விழாவில் 100 மீற்றர் Butterfly பிரிவில் 2 ஆம் இடத்தை அடைந்த நிலையில் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் சிங்கப்பூரின் 21 வயதுடைய வீரரான ஜோசப் ஸ்கூலின் வெற்றி பெற்றார்.
மைக்கல் பெல்ப்ஸ் 2008 ஆம் ஆண்டு ஜோசப் ஸ்கூலினை சந்தித்துள்ளார்.அதன் பின் எட்டு வருடங்கள் கடந்த நிலையில் ஸ்கூலின், ஒலிம்பிக் போட்டியின் போது பெல்ப்ஸை வெற்றி கொண்டுள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.ஒலிம்பிக் வரலாற்றில் 22 தங்கம் அடங்கலாக 27 பதக்கங்களை பெல்ப்ஸ் சுவீகரித்துள்ளார்.
Related posts:
தந்திரோபாய ரீதியாக மஹேல உதவலாம் - மத்தியூஸ்
ரெய்னா மீண்டும் தேர்வு: முன்னாள் வீரர்கள் வரவேற்பு!
இலங்கை – நியூசிலாந்து: இரண்டாம் நாள் ஆட்டம் இன்று.!
|
|