அடுத்துவரும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் மெத்தியூஸ் நீக்கம்!

பிரபல கிரிக்கெட் வீரரான அஞ்சலோ மெத்தியூஸ் உபாதை காரணமாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவர் 4 வராங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து அணியுடன் கிறைஸ்ட்சேர்சில் இடம்பெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் 2 வது இன்னிங்ஸில் ஓட்டங்களைப் பெறும் போது காயமடைந்த அஞ்சலோ மெத்தியூஸ், ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அவரின் இடது தொடையில் ஏற்பட்ட உபாதையால் அவர் 4 வாரங்களுக்கு போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
சாதிக்குமா இலங்கை?
பாடசாலைகளுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை!
சர்ச்சையில் சிக்கிய அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
|
|