கிரகங்கள் உருவானதை கண்டறிய நாசா முயற்சி!

அமெரிக்காவின் நாசா மையம் கிரகங்கள் உருவானதை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்காக வருகிற செப்டம்பர் 8ம் திகதி புளோரிடாவில் உள்ள கேப் கானவரல் விமான படை தளத்தில் இருந்து ‘அட்லஸ் 5 411’ என்ற ராக்கெட் ஒன்றை விண்ணில் ஏவவுள்ளது. சூரியனை சுற்றி வரும் பென்னு என்ற குறுங்கோளின் மண் மாதிரியை எடுத்து வந்து ஆய்வு மேற்கொள்ள இந்த ராக்கெட் ஏவப்படுகிறது.
‘ஓசிரிஸ்-ரெஸ்’ எனப்படும் செயற்கைகோள் உடன் பயணிக்கும் ‘அட்லஸ் 5 411’ என்ற ராக்கெட், பூமியில் இருந்து விண்ணில் 2110 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பென்னு குறுங்கோளை 2018ம் ஆண்டு சென்றடையும்.அங்கு தரை இறங்கும் ஓசிரிஸ்-ரெஸ் செயற்கைகோள் பென்னு குறுங்கோளின் மேற்பரப்பில் இருந்து 60 முதல் 2 ஆயிரம் கிராம் எடையுள்ள மண் மாதிரிகளை எடுத்துக் கொண்டு 2023ம் ஆண்டு பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
சீனாவில் வாடகை வீட்டில் 400 முதலைக் குட்டிகள்!
பேஸ்புக்கை தொடர்ந்து சர்ச்சையில் மாட்டியது யூடியூப்!
இமயமலையை அண்டிய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு! பேராபத்து ஏற்படும் என எச்சரிக்...
|
|