74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி – பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவிப்பு!

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வினை சுதந்திர சதுக்க வளாகத்தில் மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில், அதற்காக உரிய வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சுதந்திர தின நிகழ்வின் அணிவகுப்பில் முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுகளின் சுமார் 6 ஆயிரத்து 500 உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத்திற்கு நீதிபதி இளஞ்செழியன் கடும் எச்ரிக்கை !
அரசபணிகளுக்கு பயன்படுத்தப்படும் காகிதாதிகளை குறைக்க நடவடிக்கை - அமைச்சர் வஜிர அபேவர்த்தன!
பேருந்து கட்டணத்தில் மாற்றத்தை கொண்டுவர எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்கப்படமாட்டது - போக்குவரத்...
|
|