60 வயதுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!

அறுபது வயதுக்கு மேற்பட்ட மற்றும் பல்வேறு சிக்கல்களான நோய் நிலைமைகளைக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மூன்றாவது செயலூக்கி கொவிட் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியைச் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாரஹேன்பிட்டியில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் இந்தத் தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
இந்தத் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 8 ஆம் திகதிமுதல் 12 ஆம் திகதி வரை தினமும் காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 2.00 மணி வரை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச வங்கிகள் தனியார் மயமாகாது – ஜனாதிபதி!
பெற்றோலின் விலை 5 ரூபாவால் உயர்வு - லங்கா ஐ.ஓ.சீ நிறுவனம்!
மூன்று வேட்பாளர்கள் உட்பட 210 பேர் கைது - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிப்பு!
|
|
முன்னாள் போராளிகளுக்காக மாதாந்தக் கொடுப்பனவில் 2000 ரூபா ஒதுக்க வேண்டும் - ஈபிடிபியின் மாநகரசபை உறு...
இலங்கையில் இதுவரை 37 ஆயிரத்து 600 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன: 343 பேர் குணமடைந்து வெளியே...
எல்லை தாண்டி இந்திய மீனவர்கள் அடாவடி - இரண்டு விசைப் படகுகளுடன் 21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின...