5000  பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை!

Saturday, November 11th, 2017

5000 சிவில் பாதுகாப்புப் படையினரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்தது.

முதற்கட்டமாக 2900 சிவில் சேவையாளர்களை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார்.

இணைத்துக்கொள்ளப்படும் சிவில் சேவையாளர்கள் நடமாடும் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை, புத்தளம், திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இவர்கள் சேவைக்கு அமர்தப்படவுள்ளனர்.

அத்துடன், 480 சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தொல்லியல் தளங்களின் பாதுகாப்பு சேவைகளுக்கு அமர்த்தப்படுவார்கள் என சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார்.

Related posts:


அத்தியாவசியமற்ற அனைத்து செயற்பாடுகளையும் உடனடியாக நிறுத்துங்கள் - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெர...
பின்தங்கிய பிரதேசமாக எமது பிரதேசத்தை கூறுவதற்கு இனியும் நாம் இடமளிக்க முடியாது – ஈ.பி.டி.பியின் வேலண...
இணையம் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிக முறைப்பாடு – பொதுப் ப...