500 பாலங்களை நிர்மாணிக்க பிரிட்டன், நெதர்லாந்து நிதியுதவி!

கிராமங்களில் உள்ள 500 பாலங்களை நிர்மாணிக்க பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் கம்பனிகளுடன் மாகாண சபைகள் உள்ளுராட்சி விளையாட்டுத் துறை அமைச்சு இரண்டு ஒப்பந்தங்களை கொழும்பில் வைத்து கைச்சாத்திட்டது.
இத்திட்டத்திற்காக இங்கிலாந்து கம்பனி 250 பாலங்களை நிர்மாணிக்கவென 50 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களையும், நெதர்லாந்தின் கம்பனி ஒன்று 50 மில்லியன் யூரோக்களையும் வழங்குகின்றது. அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நடவடிக்கையின் பேரில் இந்த அபிவிருத்தித் திட்டம் இலங்கைக்கு கிடைக்கின்றது. இதனால் கிராமங்களில் அடிப்படை வசதியற்று கிராமங்களில் பலகை, தொங்கு பாலம் உடைந்துள்ள பாலங்கள் மற்றும் கிராமத்துக்கு கிராமம் செல்ல முடியாத பாலங்கள் அடையாளப்படுத்தப்பட்டு புதிய பாலங்கள் நிர்மாணிக்கப்படும். அத்துடன் இந்நிகழ்வின் போது புதிதாக தெரிவு செய்யப்பட்ட 8,500 உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான அமெரிக்காவின் உதவியின் கீழ் உள்ளுராட்சி சட்ட திட்டங்கள் நிதி மற்றும் கடமை பொறுப்புகள் பற்றிய கைநூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந் நூலின் முதற்பிரதிகள் அமைச்சின் பணிப்பாளர், நெதர்லாந்து பிரதித் தூதுவர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி மற்றும் ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து கம்பனிகளின் பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
Related posts:
|
|