3 ஆவது யூனிட் செயலிழப்பு : மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 ஆவது யூனிட் செயலிழந்துள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
யூனிட் 3 தேசிய மின்கம்பத்துடன் மீண்டும் இணைக்கப்படும் வரை மின்சாரம் தடையின்றி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
குறிப்பாக மின்சார சபைக்கு சொந்தமான டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது மின் உற்பத்தி அலகு செயலிழந்த காரணத்தினால் மின்வெட்டு இருக்காது எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமைதியை சீர்குலைத்து வன்முறையை தூண்டும் பதிவுகளை பதிவிட்டால் சட்ட நடவடிக்கை!
மக்களுக்கு சலுகைகளை வழங்கும் வர்த்தமானியை வெளியிட ஜனாதிபதி ஆலோசனை!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் – எச்சரிக்கம் வானிலை அவதான நில...
|
|