3 ஆவது டோஸின் தேவை குறித்து ஒக்டோபரில் ஆராயப்படும்!

ஒக்டோபர் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கெதிரான 3 ஆவது டோஸின் தேவை தொடர்பில் ஆராயப்படும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒக்டோபர் மாதம் அளவில் நாட்டின் சகலருக்கும் தடுப்பூசியை ஏற்றும் பணியை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த மாதம் இறுதியளவில் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்குத் திட்டமிட்டிருக்கின்றது.
தற்சமயம் ஒரு கோடி 20 இலட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் டோஸ் ஏற்றப்பட்டிருக்கின்றது.
இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டோரின் மொத்த எண்ணிக்கை 60 இலட்சத்தைக் கடந்திருப்பதாகவும் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆசிரியர்களின் போராட்டம் இடைநிறுத்தம்!
காதல் தொடர்பில் தெவரப்பெருமவின் வரைவிலக்கணம்!
கைதிகளை பார்வையிடுவதற்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவது தொடர்பில் நாளை தீர்மானம்!
|
|