29 மீனவர்கள் அதிரடிக் கைது : முல்லைத்தீவில் பதற்றம்!

முல்லைத்தீவு – நாயாறு கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 8 மீனவ படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு உதவி கடற்றொழில் விசாரணை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவு மீனவர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் கடற்றொழில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா வழங்கிய உறுதிமொழியை அடுத்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முல்லைத்தீவு ௲ நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களது 8 மீன் வாடிகளுக்கு இனந்தெரியாதவர்களால் தீவைக்கப்பட்டது. இதனால் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் முற்றாக சேதமடைந்தன.
குறித்த சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வங்காள விரிகுடாவில் திடீர் மாற்றம்!
கிராம உத்தியோகத்தர் 464 பேருக்கு நியமனங்கள்!
பொலித்தீன் கழிவுப்பொருட்களை கடலில் கொட்டும் நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாமிடத்தில்!
|
|