27 ஆம் திகதி முதல் இ.போ.சவின் புதிய பேருந்துகள் சேவையில்!

இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள உயர் தரத்திலான பேருந்துகள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பொது மக்களின் போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்பட இருப்பதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொது போக்குவரத்து துறையின் பிரதான திருப்பு முனையாக இது கருதப்படுகிறது. தற்சமயம் ஒன்பது பஸ் வண்டிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் 37 பஸ் வண்டிகள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளன.
ஒரு பஸ்ஸின் பெறுமதி 17 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகும். கட்டுபெத்த, மஹரகம, பொலன்னறுவை, மாத்தளை பஸ் சேவை நிலையங்களில் இந்த பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
Related posts:
5 ஆண்டுகளில் 39 தடவை வெளிநாட்டு பயணம் செய்த நாடாளுமன்ற உயர் அதிகாரி!
தேர்தலை நடத்துவது குறித்த சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விஷட கலந்துரையாடல்!
நாட்டின் சில பகுதிகளில் இன்று திடீர் மின் விநியோக தடைக்கு வாய்ப்பு - மின்சார சபையின் பொது முகாமையாளர...
|
|