24 மணிநேரத்திற்குள் அறிக்கை வேண்டும் – சுகாதார அமைச்சு !

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய அறுவை சிகிச்சைக்கு உள்ளான நான்கு நோயாளர்கள் உயிரிழந்தமை தொடர்பிலான அறிக்கை 24 மணி நேரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு
சுகாதார அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பில் விசாரணை செய்வதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
கடந்த 28ம் திகதி கொழும்பு வைத்தியசாலையில் ஆறு பேருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் நான்கு பேர் திடீர் நடுக்கத்தினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சையின் போது வழங்கப்படுகின்ற இரசாயன திரவியம் ஒன்று உரிய தரத்தைக் கொண்டிராமையே இதற்கான காரணம் என சந்தேகிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே இது தொடர்பில் உடனடி அறிக்கையை முன்வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
நல்லைக் கந்தனின் மஹோற்சவம் நாளை ஆராம்பம்!
முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியின் உத்தரவு!
ரஷ்யா - உக்ரைன் யுத்தம் - நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் அவசரமாக கூடுகிறது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்!
|
|