2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஆரம்பம் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, June 22nd, 2021

2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் இன்று (22) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும், வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கான படிவம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, புதிய வாக்காளர்களின் தரவுகளை கிராம உத்தியோகத்தர் பெற்று ஆவணத்தை புதுப்பிக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம் வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவு செய்யப்படவுள்ளன. எனினும், கொரோனா தொற்று நிலையால் எதிர்பார்க்குமளவில் ஆகஸ்ட் மாதம் இதற்கான பணிகளை பூர்த்தி செய்ய முடியாது போகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

உலகுக்கு நாம் எடுத்துக் காட்டிய நல்லிணக்கம் முழு இஸ்லாமிய உலகிற்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாகும் – ர...
திருமலை விமானப்படைத் தளத்தில் இலங்கை - இந்திய நட்புறவு அக்கடமி - அடிக்கல் நாட்டினார் இந்திய விமானப்ப...
நவம்பர் 06 ஆம் திகதிவரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது - யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஸ்ட வி...

கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு கொரோனா – முழுமையாக முடக்கப்பட்டது மன்னார் ஆயர் இல்லம...
ஒரு லீற்றர் டீசல் 12 ரூபா நட்டத்திலே விற்பனை செய்யப்படுகின்றது - நாடாளுமன்றில் எரிசக்தி இராஜாங்க அம...
இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் - ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியே 3 ஆவது முறை...