2 இலட்சத்து 56 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டது – தொற்றுநோயியல் பிரிவு தெரிவிப்பு!

ஒக்ஸ்போர்ட் / அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று வெள்ளிக்கிழமை 11 ஆயிரத்து 385 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் 2 இலட்சத்து 56 ஆயிரத்து நான்கு பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி முழுவதுமாக போடப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்று 61 ஆயிரத்து 882 பேருக்கு சினோஃபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்ட நிலையில் குறித்த தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 2 இலட்சத்த 76 ஆயிரத்து 762 ஆக காணப்படுகின்றது.
இதற்கிடையில் 14 ஆயிரத்து 673 பேருக்கு ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு அறிக்கை பிரதமரால் நாளை பிற்பகல் நாடாளுமன்றத்தில் முன்வைப்பு!
பிரதமரின் ஆலோசனைக்கு அமைய இன்றுமுதல் திரையரங்குகள் மீள் திறப்பு!
அரிசி நிர்ணய விலை தொடர்பில் இரண்டு வாரங்களில் 41 வழக்குகள் பதியப்பட்டுள்ளன – யாழ். மாவட்ட பாவனையாளர்...
|
|