2 ஆவது நாளாகவும் 5 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!

கொவிட் தடுப்பூசி செலும் வேலைத் திட்டத்தின் கீழ் 5 இலட்சத்து 13 ஆயிரத்து 820 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதன்படி, தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் 5 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கு ட்விட்டர் பதிவொன்றில் இலங்கையை பாராட்டி உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்து தெரிவித்திருந்தது. கொவிட் தடுப்பு நடவடிக்கையின் கீழ், இலங்கையில் நேற்றுமுன்தினம் மாத்திரம் இலங்கையில் 5 இலட்சத்து 15 ஆயிரத்து 830 பேருக்கும் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அரச ஊழியர்களுக்காக புதிய நடைமுறை!
நடைமுறைக்கு வந்தது 20 ஆவது திருத்தச் சட்டம் !
எதிர்வரும் காலங்களில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு நடைமுறைப் படுத்தப்படாது - பொதுமக்கள் பயன்பாட்டு ஆணை...
|
|