19ஆம் நூற்றாண்டு அரச வாள் ஜனாதிபதி மைத்திரிக்கு ரஷ்ய ஜனாதிபதி அன்பளிப்பு!

ரஷ்யாவுக்கான மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு மிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பின் பின்னர் சந்திப்பின் விசேட நினைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரஷ்ய ஜனாதிபதி சிறப்பு பரிசொன்றை வழங்கியுள்ளார்.
19 ஆவது நூற்றாண்டுக்குரிய கண்டிய யுகத்தின் அரச வாள் விளாடிமிர் புட்டினினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது. 1906 ஆண்டளவில் பிரித்தானியாவுக்கு கொண்டுசெல்லப்பட்ட இந்த வாள் பிரித்தானியாவில் நடைபெற்ற Sotheby எனப்படும் புராதனப் பொருட்கள் ஏல விற்பனையில் ரஷ்யாவினால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. இருநாடுகளுக்குமிடையிலான நெருங்கிய உறவின் அடையாளமாக இந்த புராதன வாள் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினினால் இலங்கை ஜனாதிபதிக்கு இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் கைது!
தவறான தடுப்பூசி ஏற்றியதால் 15 இலட்சம் பெறுமதியான நூற்றுக்கணக்கான புறாக்கள் இறப்பு!
இணையத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்!
|
|