101 கிலோ ஹெரோயினுடன் பாகிஸ்தான் மற்றும் ஈரான் பிரஜைகள் கைது…!

Saturday, April 2nd, 2016
இலங்கையின் தென் கடற்பரப்பில் 101 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவரும் ஈரான் பிரஜைகள் 10 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் பேதைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. படகு மூலமாக இவற்றை இலங்கைக்கு கொண்டு வந்துகொண்டிருக்கும் போது இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவினர் தெரிவித்தனர்.

Related posts: