வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் தற்போது நாடு உள்ளது – கோட்டாபய ராஜபக்ஷ!

Sunday, September 8th, 2019


மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் நாட்டின் உள்ள மிக முக்கியமான பொருளாதார மையங்கள் அந்நியப்படுத்தவில்லை என பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவிசாவளை பகுதியில் நடைபெற்ற மஹா ஜன எக்சத் பெரமுண கட்சியின் சம்மேளன கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாடு தற்போது பல்வேறு வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளதாகவும், அவற்றிலிருந்து விடுவித்து பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரம் கட்டமைக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

Related posts: