மழையுடன் கூடிய காலநிலை தொடரும் – வானிலை அவதான நிலையம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75-100 மி.மீஅளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
Related posts:
அடுத்த வருடம் உணவுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் ? - அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க!
மகத்துவமான தொழில் ஆசிரியர் தொழில் - கல்வி அமைச்சர்!
அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து - ‘லொக்டவுன்’ ஒன்றுக்கு செல்லுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் ...
|
|