கடும் வறட்சி : 25005 குடும்பங்கள் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சியினால் 25005 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலம் 26 இலட்சம் ரூபா நிதியில் 30 ஆயிரம் லீட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியான சூழலை முகாமைத்துவம் செய்யும் இணைப்புக் குழுவின் விசேட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தற்போதைய சூழலில் உன்னிச்சை குடிநீர்த்திட்டத்தினால் குடிநீர் மற்றும் விவசாய பயிர்ச் செய்கைக்கு எவ்விதம் நீரைப் பகிர்ந்துகொள்வது பற்றியும் ஆராயப்பட்டது.
இதில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், மாவட்ட பாதிப்புக்கள் பற்றிய அறிக்கையினை இக்கூட்டத்தில் சமர்பித்தார்.
நீர்ப்பாசனம், விவசாயம், வணஜீவராசிகள், கால்நடை உற்பத்தி சுகாதாரம், தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை மற்றும் அரச திணைக்களங்களின் உயர்அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் வறட்சியில் 25005 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நிதியில் 30 ஆயிரம் லீட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இத்துடன் 7723 ஏக்கர் நெல்வயலும் 629 ஏக்கர் மேட்டு நிலபயிர்களும் 750 நன்னீர் மீனவர்களும் கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காட்டுயானை தொல்லையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விசேட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|