வைத்தியசாலை வளாகத்திற்குள் பொலித்தீன் பாவனைக்குத் தடை!

Friday, December 14th, 2018

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களை கொண்டு செல்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் சுற்றுச்சூழல் நலன் மற்றும் நோயாளர்களின் சுகாதாரம் கருதியே பொலித்தீன் பிளாஸ்ரிக் பாவனைகள் மருத்துவமனை வளாகத்திற்குள் தடை செய்யப்படுவதாக மருத்துவமனை அத்தியட்சகர் தெரிவித்தார்.

நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருகின்றவர்கள் பொலித்தீன் பிளாஸ்ரிக் பொருள்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் கேட்டுகொண்டுள்ளனர்.

Related posts:


அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் கைச...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச - இந்திய வெளிவிவகார செயலாளர் விசேட சந்திப்பு! – இரு நாடுகளுக்கும் இடையிலான நீ...
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை - பி...