வேறு எந்த மிருகங்களுக்கும் கொவிட் தொற்று உறுதியாகவில்லை – வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

தெஹிவளை மிருககாட்சிசாலையில் வேறு எந்த மிருகங்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான தோர் என்ற சிங்கம் மற்றும் சீனா என்றழைக்கப்படும் பெண் சிங்கம் ஆகியன தற்போது குணமடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சிங்கத்திற்கு மேற்கொண்ட எக்ஸ்-கதிர் பரிசோதனையின்போது அதன் நெஞ்சு பகுதியில் சளி காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நாளாந்தம் மிருகங்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம் என சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் இதற்கான உரிய நடவடிக்கைகளை மிருககாட்சிசாலை திணைக்களம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பாலித சிறிவர்தன பதவி உயர்வு!
தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் இராஜினாமா !
“ஆசியாவின் எதிர்காலம்” மாநாட்டில் கருத்துரை வழங்கும் தென்னாசியாவின் முதலாவது தலைவர் கோட்டபய - ஜப்பான...
|
|