வெளிநாட்டு பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் – 300 அமெரிக்க டொலராக உயர்வு!

எதிர்வரும் ஜனவரி மாதம்முதல் வெளிநாடு செல்லும் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், 300 அமெரிக்க டொலராக என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பல நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.மேலும் பல நாடுகளுடன் இது குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.இதற்கமைய, 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் வெளிநாட்டு பணியாளர்களுக்காக குறித்த குறைந்தபட்ச ஊதியத்தினை அமுல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
ஆகக் கூடுதலான அபிவிருத்தியை வடக்கு - கிழக்கில் ஏற்படுத்த நடவடிக்கை - அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல!
யாழ்ப்பாணம் - மானிப்பாய் - கரைநகர் வீதியின் கட்டுமாணப் பணிகள் விரைவில் ஆரம்பம்!
ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கும் நியமங்களை மாற்றியமைக்க அரசாங்கம் தயார் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்...
|
|