வெளிநாட்டிலுள்ள 32000 இலங்கையர்களுக்கு அதிஸ்டம்!

புலம்பெயர்ந்து வெளிநாட்டில்வாழும் 400 குடும்பங்களை சேர்ந்த சுமார் ஆயிரம் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லை, இசுருபாயவில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் அமைச்சர் எஸ்.பி.நாவின்னவின் தலைமையில் இரட்டை குடியுரிமைவழங்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 3 வருடங்களுக்குள் வெளிநாட்டில் உள்ள 32000 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஜெனரல்தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியில் இலங்கை உள்ளிட்ட 17 நாடுகளில் இரட்டை குடியுரிமை வழங்கும் நடைமுறை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
4 வாரங்களில் 31 ஆயிரத்து 690 பேர் கைது : 8 ஆயிரத்து 151 வாகனங்களும் பறிமுதல் –பொலிஸ் தலைமை அலுவலகம் ...
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 வது நாடாளுமன்றில் 11 வீத இளம் உறுப்பினர்கள்!
அறநெறி கல்வியை கட்டாயமாக்க திட்டம் - அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிப்பிக்க நடவடிக்கை - அமைச்சர் விதுர...
|
|