வீதி புனரமைத்து தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை முள்ளிப் பகுதி மக்கள் கோரிக்கை!

மணியந்தோட்டம் 1ஆம் குறுக்குத்தெருப் பகுதியின் வீதியை புனரமைத்து தருமாறு அரியாலை முள்ளி பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பவம் ரவீந்திரதாசன் அவர்களிடமே குறித்த கோரிக்கையை முள்ளிப்பகுதி மக்கள் முன்வைத்துள்ளனர்.
குறித்த பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட இரவீந்திரதாசனிடம் அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் தெரிவிக்கையில் – தமது பகுதி வீதிகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் போக்குவரத்தின் போது பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் என்றும் கவலை தெரிவித்தனர்.
மக்களது பிரச்சினைகள ஆராயந்தறிந்து கொண்ட அம்பலம் இரவீந்திரதாசன் குறித்த கோரிக்கையை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய தீர்வினை பெற்றுத்தர முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|