வாழைச்சேனையில் கைக்குண்டுகள் இரண்டுமீட்பு!

வாழைச்சேனை – கும்புறுமூலைப்பகுதியில் இரண்டு கைக்குண்டுகள், மீட்கப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்துள்ளார்.
கிரான்கும்புறுமூலை மரமுந்திரகை வீதியில் புதிதாக அமைக்கப்படும் உல்லாச விடுதிவேலையின் போது, காணியைத்துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை, குறித்த இருகைக்குண்டுகளையும் கண்டு, வாழைச்சேனை பொலிஸாருக்கு ,உல்லாசவிடுதியினர் அறிவித்துள்ளனர்.
அதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட வாழைச்சேனை பொலிஸார், இதனைச் செயலிழக்கும் வகையில் மட்டக்களப்பிலுள்ள குண்டு செயலிழக்கும் பகுதியினருக்கு அறிவித்துள்ளனர்.
Related posts:
தேசிய அடையாள அட்டை பெறாத மாணவர்களுக்கான அறிவிப்பு!
ஆதரவு கொடுக்க நாம் பணப்பெட்டிகளை பெற்றுக்கொண்டது கிடையா - ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர் வி...
இருவேறு இராஜாங்க அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார் சமல் ராஜபக்ஷ!
|
|