வாக்காளர் அட்டை விநியோகம் நாளையுடன் நிறைவு – தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவிப்பு!

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளில் 95 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாளைய தினத்திற்குள் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கையை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
நாளைய தினத்திற்கு பின்னர் வாக்காளர் அட்டை கிடைக்க வில்லை எனின் தபால் காரியாலயத்தில் வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தாபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய அரசியல் அமைப்பின் மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரம்!
கொள்கை நிலைப்பாட்டை மக்கள் மயப்படுத்தும்போதுதான் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கின்றது - ஈ.பி.டி.பி...
பொருட்கள் விநியோகத்துக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் 21 ஆம் திகதிவரை நீடிப்பு...
|
|