வாக்காளர் அட்டைகள் விநியோகப் பணிகள் 68 வீதம் நிறைவு – தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவிப்பு!

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகப் பணிகள் 68 வீதம் நிறைவடைந்துள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரையில் 110 இலட்சத்து 26 ஆயிரத்து 558 வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப் பட்டுள்ளதாகவம் இவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்பட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இடம்பெறுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பொது மக்கள் குறித்த காலப்பகுதியில் வீடுகளில் இருக்குமாறும் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாளை மின்சார விநியோகம் சீராகும்! - அரசாங்கம்
விசேட நிகழ்வுகளுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் - ஜனாதிபதி ஊடக பிரிவு!
எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து கடன்பெற நிதி அமைச்சு பேச்சுவார்த்தை - எரிசக்தி அமைச்சர் ...
|
|