வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளாத வாக்காளர்களுக்கு – மேலும் இரு தினங்கள் சலுகை – தபால் திணைக்களம் அறிவிப்பு!

இதுவரை வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளாத வாக்காளர்களுக்கு இறுதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை செவ்வாய்கிழமை மற்றும் நாளைமறுதினம் புதன்கிழமை ஆகிய தினங்களில் அஞ்சல் அலுவலகங்களுக்கு சென்று வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தியதன் பின்னர் வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, சுமார் நான்கரை இலட்சம் வாக்காளர் அட்டைகள் இதுவரை விநியோகிக்கப்படாது தபால் நிலையங்களில் தேங்கிக்கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரான்ஸ்ஸிலிருந்து வருகிறது டெங்கு தடுப்பூசி !
பொதுமக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!
இவ்வாண்டில் கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள்களுடன் 61,300 பேர் கைது - பிரதி பொலிஸ் மா அதிபர் !
|
|