வவுனியா நகர்பகுதியில் மூடப்பட்ட பாடசாலைகள் நாளைமுதல் ஆரம்பம் – முடக்கப்பட்டுள்ள சில பகுதிகளும் நாளை விடுவிப்பதற்கு நடவடிக்கை!

Sunday, January 17th, 2021

வவுனியாவில் கொரோனா தொற்று அச்சம்’ காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட நகர பாடசாலைகள், நாளை திங்கள்கிழமைமுதல் மீண்டும் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

முன்பதாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நகரப்பகுதிகள் உட்பட்ட 19 கிராமசேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அநேகமான பி.சி.ஆர். பரிசோதனைகளிற்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இதுவரை 175 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து நகரின் நிலை குறித்து வவுனியா மாவட்ட செயலகத்தில்  கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

அதன்படி நகரில் கல்வி செயற்பாடுகள் நிறுத்தப்பட்ட அனைத்து பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளும்  நாளை ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நகரில் முடக்கப்பட்டுள்ள சில பகுதிகளை நாளை விடுவிப்பதற்கும் குறித்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: