வவுனியா உள்ளிட்ட மேலும் 3 மாவட்டங்களில் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை முன்னெடுப்பு – அமைச்சர் தம்மிக்க பெரேரா!

ஒரு நாள் சேவையின் (on days service) ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடுகள் மேலும் 3 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை (4) முதல் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கல் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களாக, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்துக்கு நாளாந்தம் பெருமளவானோர் வருகைதந்தனர்.
இதன்காரணமாக இரண்டு சேவை முறைகளின் கீழ் ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கல் சேவையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் மேலும் 3 மாவட்டங்களில் கடவுச்சீட்டு சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிரதமரது விசாரணைகளை அடுத்து பதவி இழக்கிறார் விஜயகலா!
ஹொங்கொங்கில் காவற்துறை தலைமையகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் !
12, 500 மெற்றிக் தொன் உரம், 10 நாட்களுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீ...
|
|