வழமைக்கு திரும்பியது நுரைச்சோலை அனல் மின்நிலையம்!

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் செயற்படாமல் இருந்த மற்றுமொரு இயந்திரம் மீண்டும் செயற்பட ஆரம்பித்திருப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அனல் மின்நிலையத்தில் உள்ள மூன்று இயந்திரங்களும் சமீபத்தில் செயலிழந்தன. இதில் இரண்டு இயங்கி வந்த நிலையில் தற்பொழுது மூன்றாவது இயந்திரமும் செயற்பட ஆரம்பித்துள்ளது. இதனால் 300 மெஹாவோட்ஸ் மின்சாரம் தேசிய மின்வலைப்பின்னலுடன் ஒன்றிணைக்கப்பட்டு நாட்டில் மின்வெட்டினை நீக்க முடிந்துள்ளது என்று அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்சன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ்.நகரப் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுகளால் பண்ணைக் கடல் உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம் - ஈ....
இலங்கை மீனவர்களை விடுவிக்க இந்தியா தீர்மானம்!
மகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிக்குமாறு இந்து சயம மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்க...
|
|