வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Tuesday, July 20th, 2021இன்றுமுதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை தமிழக கடலோரம், மன்னார் வளைகுடாப் பகுதி, ஆந்திர கடலோரப் பகுதி, தெற்கு வங்ககடல், மத்திய வங்கக் கடல், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு பகுதிகள், அரபிகடல் , தென்மேற்கு அரபிக்கடல் ,மத்திய மேற்கு அரபிக்கடல், வடக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு நிலையம். தெரிவித்துள்ளது.
இதனிடையே நாட்டின் சில பகுதிகளில் காற்று அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதற்கமைய, மத்திய மலைநாட்டில் கடும் காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, காலிமுதல் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதி, இடைக்கிடையே கொந்தளிப்பாக காணப்படும்.
இதனால் அந்த பகுதியில் உள்ள கடற்றொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் முன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Related posts:
|
|