வலி. வடக்கில் பலாலி, தையிட்டிப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு !

வலி. வடக்கில் மீள்குடியேறிய பலாலி தெற்கு, தையிட்டி தெற்கு ஆகிய பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மேற்படி பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதிகளில் மூன்று நாட்களுக்கு ஒரு தடவையே நீர் விநியோகம் இடம்பெறுவதாகக் குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள்
வலி.வடக்குப் பிரதேச சபையால் விநியோகிக்கப்படும் நீர் மக்களின் தேவைகளுக்குப் போதுமானதாகக் காணப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
தமது நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related posts:
ஆங்கில பாடத்தில் 51 வீதமான மாணவர்களே சித்தி!
மக்களால் எனக்கு வழங்கப்பட்டுள்ள 60 மாதகால வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வேன் – ஜனாதிபதி உறு...
சுதேச பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொது வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் மட்டுமே எரிபொருட்களின் ...
|
|