வலிகாமம் வடக்கில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதியிலுள்ள நான்கு பாடசாலைகளில் புதிய வகுப்பறைக் கட்டடத் தொகுதிகள்

வலிகாமம் வடக்குத் தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதியிலுள்ள நான்கு பாடசாலைகளில் தலா-62 இலட்சம் ரூபா செலவில் வகுப்பறைக் கட்டடத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கு மீள் குடியேற்ற அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி, தையிட்டி கணேசா வித்தியாலயம், தையிட்டி சிவகுருநாதர் வித்தியாலயம், ஒட்டகப்புலம் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் இந்தப் புதிய வகுப்பறைக் கட்டடத் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன.
Related posts:
இலங்கையில் ஓட்டுநர்கள் அற்ற வாகன தொழில்நுட்பத்தை உருவாக்கும் நடவடிக்கை!
பயங்கரவாத தடைச்சட்டத்தில் பல திருத்தங்கள் - வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
போதைப் பொருட்களை பாவிக்கும் பேருந்து சாரதிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை - மோட்டார் போக்குவரத்து பொல...
|
|