வறட்சியுடன் கூடிய காலநிலை – நீரை சிக்கமாக பயன்படுத்துமாறு பொது மக்களுக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தல்!

நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்சமயம் நிலவும் வரட்சியுடன் கூடிய காலநிலையினால் நீர் மூலங்களின் நீர் மட்டம் குறைவடைந்துவருகிறது.
அதேநேரம் மக்களின் நீர் பயன்பாடும் தற்சமயம் அதிகரித்திருப்பதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே வாகனங்களை கழுவுவதற்கும் வீட்டுத் தோட்டங்களுக்காகவும் நீரை பயன்படுத்த வேண்டாம் என்றும் அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரமே நீரைப் பயன்படுததுமாறும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
தற்சமயம் நிலவும் வரட்சியுடன் கூடிய காலநிலையினால், மேட்டுநிலப் பிரதேசங்களுக்கான நீர்விநியோகம் தற்சமயம் குறைந்த அழுத்தத்தில் இடம்பெறுவதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
குழந்தைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை!
யாழ்ப்பாண பல்கலையில் பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி இல்லை : நிலமைகளைப் பொறுத்து பரிசீலிக்கப்படும் என ...
இலங்கை - பாகிஸ்தான் வர்த்தகத் தொடர்பை மேலும் விரிவுபடுத்த அமைச்சர் பந்துல தலைமையிலான விசேட குழு பாகி...
|
|