வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 13,14ஆம் திகதிகளில் இடம்பெறும் – தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச அறிவிப்பு!

மேட் இன் ஸ்ரீலங்கா வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது தொடரபில் ஊடகங்களுக்கு இன்று கருத்துரைத்த அவர் மேலும் தெரிவிக்கையில் -உள்நாட்டவர்கள் புதிய நம்பிக்கை, உத்வேகத்துடன் உற்பத்திகளை மேற்கொள்ளும் விடயத்தில் அவதானம் செத்தியுள்ளனர் என்றும் அவர்களிடையே ஏற்பட்டுள்ள ஆர்வத்தை மேலும் பலப்படுத்தவதற்கான ஒரு காரணியாக மேட் இன் ஸ்ரீலங்கா வர்த்தக கண்காட்சி அமையும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே, இந்த மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதி இலங்கை மன்றக்கல்லூரிக்கு முன்பாகவுள்ள வீதியில் வர்த்தக கண்காட்சிக்கு வருமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
Related posts:
இணையவழி மூலம் வியாபார முகாமைத்துவ கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!
தன்னிச்சையாக செயற்படுவதை கைவிட்டு மக்களுக்கு சேவையை செய்ய முன்வாருங்கள் - ஈ.பி.டி.பியின் பச்சிலைப்ப...
யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு 6 விண்ணப்பங்கள் ஏற்பு!
|
|