வரையறையில்லாத அபிவிருத்திகளை முன்னெடுத்து செல்லுவதே இலக்கு – ஜனாதிபதி செயலக தொழில் விவகாரங்களின் பணிப்பாளர் தெரிவிப்பு!

………..
பொருளாதாரம் முதல்கொண்டு ஏனைய அனைத்து விடயங்களிலும் பிற மாகாணங்களைப் போன்று வடமாகாணமும் அபிவிருத்தியடைய வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கம் என ஜனாதிபதி செயலக தொழில் விவகாரங்களின் பணிப்பாளர் நாயகம் சமன்ரத்தபிரிய தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ஜனாதிபதியில் யாழ்.விஜயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பெருமளவான நிதி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி ஓதுக்கீட்டின் ஊடாக வரையறையில்லாத பிரதேச ரீதியாக அபிவிருத்திகளை முன்னெடுத்து செல்லுவதே இலக்காக இருக்கின்றது.
மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை உருவாக்க வேண்டும் தமிழ் மக்களுக்கிடையே பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றது என்று தெரியும்.
காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கான பிரச்சணை 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பூர்த்தியாகும். இவர்களுக்கான பிரச்சனை இலகுவில் தீர்த்துவைப்பதற்காக 250 மில்லியன் ரூபாவை வழங்கவும் ஏதிர்பார்த்துள்ளோம்.
சமூர்த்தி, அஸ்சுவச போன்ற நிதி நிவாரணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்து. அதில் யாழ்ப்பாண மாவட்டம் அதிஷ்டவசமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முறைப்பாடுகள் குறைவாகத்தான் இருக்கின்றது.
வடக்கினை ஏனைய மாகாணங்களை போன்று சமமாக பார்க்கவேண்டும் என்பதுதான் ஜனாதிபதியின் நோக்கம்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பல்கலைக்கழகங்களில் சிங்கள, ஆங்கில மொழியிலான மாவணர்களை கல்விகற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண விவசாயிகள் ஒரு புத்திசாலிகள் அவர்களுக்கான நவீனமாயப்படும் விவசாய நலன்களையும் முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேசத்தில் மின்வலு, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தினை உருவாக்கவும் எதிர்பாக்கப்பட்டுள்ளது. அதற்காக 2.2 பில்லியனை செலவுசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 131 பேரது காணிகளை உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து விடுவித்துள்ளோம்.
அதேபோல் 2,700 குடும்பங்களுக்கு இன்னும் காணிகள்,வீடுகள் இன்றி வசித்துவருகின்றனர்.
அவர்களுக்கான காணிகள், வீடுகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பூர்த்தியாகப்படும்.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக ஒருசிலர் விடுதலையாகியுள்ளனர். சில குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் விடுதலையாகியுள்ளனர். சிலருக்கு நீதிமன்றத்தின் ஊடாக வழக்கு நடைபெற்று வருகின்றது. அவர்களும் மிகவிரைவில் விடுதலையாகுவார்கள்.
ஜனாதிபதி நாளாந்தம் பல விடயங்களை முன்னெடுத்து வருகின்றார். வரிகள் இல்லாமல் அரசாங்கம் இல்லை.
வரிகள் இல்லாமல் அரசாங்கத்தின் செலவுகளை செலவு செய்யவேண்டும். 2100 பில்லியன் வரிச்சலுகை 2019 ஆண்டு காலப்பகுதியில் இழக்கப்பட்டது.
அதன்காரணமாக நாடு பொருளாதார ரீதியாக பின்னடைவுக்கு காரணமாக இருந்ததுடன் தற்போது வரி அதிகரிப்புக்கும் காரணமாக இருக்கின்றது. அதனால் தான் வரி உயர்வும் அவசியமாக இருக்கின்றது” என தெரிவித்தார்
0000
Related posts:
|
|