வருமான வரியை மீள அறவிட அமைச்சரவை அனுமதி!

வருமான வரியை மீள அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரண இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வருமான வரியை மீள அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாடு முடக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் செலுத்தப்படவிருந்த வருமான வரியை செலுத்த தவறியவர்களுக்கான அபராதத்தை அறவிடாதிருக்க ஏற்கனவே அரசாங்கம் தீர்மானித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நடுக்கடலில் தீப்பிடித்த சர்வதேச கப்பல்: காப்பாற்றிய இலங்கை கடற்படை!
இடர் அனர்த்த நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு தயார் - தேசிய அனர்த்த சேவை மத்திய நிலையம்!
தமிழ் மக்களின் தீர்க்கதரிசனமற்ற தீர்மானங்களின் விளைவுகளை தவிர்க்க முடியாதுள்ளது - அமைச்சர் டக்ளஸ் ஆத...
|
|