வட மாகாணத்தில் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டு!

வட மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு நேற்று கொரோனா தொற்றுறுதியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் நேற்று 290 பேருக்கான பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவற்றில் 14 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்றுறுதியானவர்களில் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள 7 பேரும் அடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பட்டதாரிகளுக்கு மார்ச்முதல் பயிற்சி - அமைச்சரவை அனுமதி!
பூமியை நெருங்கிய சூரியன்...!
படகுப்பாதை அனர்த்தத்தின் பின்னரான புதிய பேருந்து சேவைக்கு எதிர்ப்பு!
|
|