வடமராட்சி கிழக்கு தம்பலகாமம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு!

வடமராட்சி கிழக்கு தம்பலகாமம் ஆற்றுப்பாதையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பளை பொலிஸார் தெரிவித்தனர்
செம்பியன்பற்று மாமுனையைச் சேர்ந்த தனபாலசிங்கம் குணசிங்கம் (வயது -43) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரணமடைந்தவர் மீது தாக்குதல் நடத்தியவர் அல்லது நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என பளை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
பெப்ரல் அமைப்பிற்கு அமைச்சர் பைசர் முஸ்தபா விளக்கம்!
இலவசமாக மருந்துகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்!
நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து பெண் கிருமித் தொற்றுக் காரணமா...
|
|